பதிவு செய்த நாள்
14 ஏப்2020
02:13
வியன்னா:கச்சா எண்ணெய்யை மிகப்பெரும் அளவில் உற்பத்தி செய்துவரும் நாடுகள், தங்கள் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவுக்கு குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும், ரஷ்யா_ சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான விலை போரினாலும், கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்து இருந்தது. இந்நிலையில், விலை அதிகரிக்கும் வகையில், உற்பத்தியை குறைக்கும் முடிவுக்கு இந்நாடுகள் வந்துள்ளன.
இந்த முடிவினை அடுத்து, பிரன்ட் கச்சா எண்ணெய், ஒரு பேரலுக்கு, 5 சதவீதம் அதிகரித்து, 33.08 அமெரிக்க டாலராக திங்கள் கிழமை காலை உயர்ந்தது.சவூதி அரேபியாவின் தலைமையிலான, எண்ணெய் உற்பத்தி உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பான, ’ஒபெக்’ மற்றும், ரஷ்யாவின் தலைமையிலான கூட்டணி நாடுகள் ஆகியவை, கடந்த ஞாயிறன்று, காணொலி மூலமாக கலந்துபேசி, உற்பத்தியை குறைப்பது என்ற முடிவை எடுத்துள்ளன.
இந்தக் கூட்டத்தில், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள், மே, ஜூன் மாதங்களில், அதிக அளவில் உற்பத்தியை குறைப்பது என்றும், அதன்பின், 2022ம் ஆண்டு வரை உற்பத்தியை மெதுவாக அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முடிவை, அமெரிக்க அதிபர், டிரம்ப் வரவேற்றுள்ளார்.
இந்த முடிவின் காரணமாக, எரிபொருள் துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை காப்பாற்றப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இதற்காக, ரஷ்யாவின் அதிபருக்கும், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|