பதிவு செய்த நாள்
19 ஜூன்2020
21:34
புதுடில்லி:பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., புதிய பங்குகள் வெளியீட்டுக்கு வரும் முயற்சியில் உள்ளது. இதையடுத்து, பங்கு வெளியீடு குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கு, முதலீட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து விண்ணப்பங்களை கோரி உள்ளது,
மத்திய நிதியமைச்சகம்.எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு முன்பான ஆலோசனைகளை, டி.ஐ.பி.ஏ.எம்., எனும், ‘முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை’க்கு வழங்குவதற்காக, இரண்டு ஆலோசகர்களை நியமிக்க, நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஆலோசகர்கள், விண்ணப்பங்களை, ஜூலை, 13ம் தேதி வரை அனுப்பலாம். 14ம் தேதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.ஆலோசகர்கள், ஏப்ரல், 2017ம் ஆண்டுக்கு பிறகு, 5,000 கோடி ரூபாய் அல்லது மேற்பட்ட தொகையை திரட்டும் வகையிலான, புதிய பங்கு வெளியீட்டை முழுமையாக மேற்கொண்ட அனுபவம் உடையவர்களாக இருக்க வேண்டும் என, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|