வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 5வது இடத்தை பிடிக்க வாய்ப்பு வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 5வது இடத்தை பிடிக்க வாய்ப்பு ...  தங்கத்தின் தேவை சரிகிறது உலக தங்க கவுன்சில் அறிக்கை தங்கத்தின் தேவை சரிகிறது உலக தங்க கவுன்சில் அறிக்கை ...
பறிபோன தலைமையகம் பரிதாபத்தில் அனில் அம்பானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2020
00:42

மும்பை:நிலுவைத் தொகையை திருப்பி செலுத்தாததால், அனில் அம்பானியின் தலைமையகத்தை, யெஸ் பேங்க் கையகப்படுத்தி உள்ளது.

அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், யெஸ் பேங்குக்கு செலுத்த வேண்டிய, 2,892 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய காரணத்தால், மும்பை சான்டாகுரூசில் இருக்கும் அவரின் தலைமையகத்தை, யெஸ் பேங்க் கையகப்படுத்தி உள்ளது.

திவால் நடவடிக்கை

மேலும், தெற்கு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருக்கும், அனில் அம்பானிக்கு சொந்தமான இரண்டு வீடுகளையும், கையகப்படுத்தி உள்ளது. தலைமையகம் மற்றும் வீடுகளை கையகப்படுத்திய விபரத்தை, யெஸ் பேங்க், செய்தித்தாள்கள் மூலம் தெரிவித்து உள்ளது.

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களும், ‘ரிலையன்ஸ் சென்டர்' என்று அழைக்கப்படும் சான்டாகுரூஸ் அலுவலகத்துக்கு வெளியே தான், அண்மைக் காலமாக செயல்பட்டு வருகின்றன.கடந்த சில ஆண்டுகளாகவே, திவால் நடவடிக்கைகள் மற்றும் பங்குகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது, அனில் திருபாய் அம்பானி குழுமம்.

கடனில் சிக்கியது

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திலிருந்து, 2,892.44 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, மே, 6ம் தேதி வசூலிக்க முயன்றதாகவும், அறிவிப்பு வெளியான, 60 நாட்களுக்கு பிறகும், கடனை திருப்பி செலுத்தத் தவறியதால், ஜூலை, 22ம் தேதி, மூன்று சொத்துக்களையும் கையகப்படுத்தியதாகவும், யெஸ் பேங்க் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன், 23ம் தேதியன்று, அனில் அம்பானி, ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம், நடப்பு நிதியாண்டில், முற்றிலும் கடன் இல்லாத நிறுவனமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் பாக்கித் தொகைக்காக, தலைமையகத்தையே பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)