பதிவு செய்த நாள்
14 ஆக2020
22:27
திருப்பூர்:நடைமுறைக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகளை தளர்த்தி, முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுதிக்கு, அரசு கை கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய ஆடை உற்பத்தி நிறுவனங்கள், முக கவசம், முழு கவச ஆடைகளை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. முக கவசம் மற்றும் முழு கவச ஆடைக்கு சில நிபந்தனையுடன், ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது: திருப்பூர் உட்பட பல்வேறு நகர ஆடை உற்பத்தி துறையினர், வெளிநாடுகளிலிருந்து அதிகளவு மெஷின்களை இறக்குமதி செய்து நிறுவியுள்ளனர்.உள்நாட்டு தேவைக்கு அதிகமாக, முக கவசம், முழு கவச ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
அனுமதி அளிக்கப்பட்டபோதும், கட்டுப்பாடுகள், நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளதால், நிறுவனங்கள், ஏற்றுமதிக்கு அனுமதி பெறுவது மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. போதிய வழிகாட்டுதல் இல்லாததால், பெரும்பாலான நிறுவனங்களால், தரச்சான்று கூட பெறமுடிவதில்லை.
பல நிறுவனங்கள், முழு கவச ஆடை, முழுகவசம் உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளன. இதனால், பல லட்சம் மதிப்பில் இறக்குமதி செய்த மெஷின்கள், இயக்கமின்றி உள்ளன. எனவே, கட்டுப்பாடுகளை தளர்த்தி, முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|