தங்கம் விலை ரூ.896 அதிகரிப்பு - சவரன் ரூ.41,496க்கு விற்பனைதங்கம் விலை ரூ.896 அதிகரிப்பு - சவரன் ரூ.41,496க்கு விற்பனை ...  வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு ...
துளிர்விடத் துவங்கியிருக்கும் நுகர்வோர் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2020
21:50

புதுடில்லி:கொரோனா பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையிலும், நுகர்வோர் நம்பிக்கை ஓரளவு அதிகரித்துள்ளதாக, போஸ்டன் ஆலோசனை குழுமத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிறுவனம், கடந்த ஜூலை, 20ம் தேதி முதல், ஆக., 2ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 3,000 பேரிடம், நகரங்களிலிருந்து குக்கிராமம் வரையில், இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளது. ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிட்டத்தட்ட, 44 சதவீத நுகர்வோர், அடுத்த ஆறு மாதங்களில் அவர்களது வருவாய், கொரோனா காலத்துக்கு முன்பிருந்ததை விட குறைவாகவே இருக்கும் என தெரிவித்து உள்ளனர். இதுவே, கடந்த மே மாதம், 18ம் தேதி முதல், 23ம் தேதி வரையிலான கால கட்டத்தில் மேற்கொண்ட ஆய்வின்போது, 57 சதவீதம் பேர் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

இதேபோல், செலவு குறித்த நம்பிக்கையும் ஓரளவு சிறப்பாகவே இருக்கிறது. இதற்கு முந்தைய ஆய்வில், 53 சதவீதம் பேர், அடுத்த ஆறு மாதங்களில் செலவு குறைவாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய ஆய்வில், 43 சதவீதம் பேரே இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.

நடவடிக்கை

மேலும், 53 சதவீதம் பேர், வேலைக்கு செல்வதாகவும்; வழக்கமான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாகவும் தற்போதைய ஆய்வில் தெரிவித்துள்ளனர். இது முந்தைய ஆய்வில், 15 சதவீதமாக இருந்தது.இதற்கு முந்தைய ஆய்வில், நண்பர்களை பார்க்கச் சென்றதாக, 10 சதவீதம் பேர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, 66 சதவீதம் பேர் நண்பர்களை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய நிலையை, பல்வேறு விஷயங்களில் இன்னும் எட்டவில்லை என்றே பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போதைய ஆய்வு, கொரோனாவுக்கு பிறகான ஐந்தாவது ஆய்வாகும். ஒட்டுமொத்த ஆய்வையும் ஒப்பிடும்போது, நுகர்வோர் நடவடிக்கைகளில் முன்னேற்றம் தெரிய வந்துள்ளது.

நுகர்வோர் உணர்வில் மாற்றத்தைக் காண முடிகிறது. இதற்கு முந்தைய ஆய்வுகளின் போது, நுகர்வோர்களிடம் மிகுந்த பய உணர்வும்; பொருளாதாரம், வருமானம் குறித்த அதிக கவலையும் இருந்தன.ஆனால், சமீபத்திய ஆய்வில், அவர்கள் எச்சரிக்கையுடன் வாழ கற்றுக் கொள்வது தெரிய வந்துள்ளது.‘ஆன்லைன்’ மீட்சியை பொறுத்தவரை, சிறிய நகரங்களில் விரைவாக இருக்கிறது. சிறிய நகரங்களில், கொரோனாவுக்கு முன் அத்தியாவசிய பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றது போலவே, இப்போதும் செல்லத் துவங்கி இருப்பதாக, 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதுவே, நகரங்களில், 27 சதவீதமாக குறைந்து உள்ளது.

செலவுகள் செய்வது பல பிரிவுகளில் மேம்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை பொறுத்தவரை, ஆரோக்கியம், குடும்ப பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவு முன்னிலை வகிக்கிறது.அடுத்து, தனிநபர் ஆரோக்கியம், பேக்கேஜ்டு உணவுகள், உடை, நுகர்வோர் மின்னணு பொருட்கள், மேக் அப் பொருட்கள் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.ஆனால், பயணம் மற்றும் குடும்பத்தினருடன் வெளியே செல்வது ஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மின்னணு வர்த்தகம் வலுவாக முன்னேறி இருக்கிறது. கடந்த மூன்று, நான்கு மாதங்களில், ‘ஆன்லைன்’ மூலமான வர்த்தகத்துக்கு, புதிதாக, 20 சதவீதம் பேர் வந்துள்ளனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)