பதிவு செய்த நாள்
19 செப்2020
20:56
புதுடில்லி:நடப்பு ஆண்டில், கடந்த ஜூன் மாதம் வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட, 250 நலிவுற்ற நிறுவனங்கள் திவால் சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டதாக, இந்திய திவால் மேலாண்மை வாரியத்தின் தலைவர் எம்.எஸ்.சஹூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:நடப்பு ஆண்டில், கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், 250 நிறுவனங்கள் திவால் சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு உள்ளன.இவற்றில், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவை ஆகும்.
தோல்வியுற்ற அனைத்து நிறுவனங்களும் திவால் நிலைக்கு உட்படுத்தப்பட்டால், அவற்றில் பெரும்பாலானவை, மீள இயலாமல் போய்விடும்.கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு எதிரான திவால் நடவடிக்கைகளை, வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த மார்ச் 25ல் துவங்கிய பாதிப்புகள் இன்னும் தொடர்கின்றன. எனவே, தேவைப்படும் நிலை ஏற்பட்டால், இந்த தடை ஓராண்டு வரை நீட்டிக்கப்படலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|