பதிவு செய்த நாள்
19 செப்2020
20:57
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை, நடப்பு ஆண்டில், 11.5 சதவீதம் அளவுக்கு குறையும் என, பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், இதற்கு முன் எரிபொருள் தேவை, 9.4 சதவீதம் அளவுக்கு குறையும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதை, 11.5 சதவீதமாக அதிகரித்து அறிவித்துள்ளது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 4.5 சதவீதமாக இருக்கும் என்று முன்னர் கணித்திருந்ததை மாற்றி, மைனஸ் 8.6 சதவீதமாக இருக்கும் என்று அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எரிபொருள் தேவையும் அதிகம் குறையும் என தற்போது தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:நுகர்வோர் மற்றும் தொழிற்சாலை களுக்கான எரிபொருள் தேவை மிகவும் குறைந்து வருகிறது. நிலைமைகள் சீரடையும் பட்சத்தில், அடுத்த நிதியாண்டில் எரிபொருள் தேவை, 5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|