ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தில் சில்வர் லேக் கூடுதல் முதலீடு ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தில் சில்வர் லேக் கூடுதல் முதலீடு ...  ஜி.எஸ்.டி., வரி வசூல் செப்டம்பர் மாதத்தில் சாதனை ஜி.எஸ்.டி., வரி வசூல் செப்டம்பர் மாதத்தில் சாதனை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஊரடங்குக்கு பிறகு முதன்முறையாக பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2020
21:07

புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் விற்பனை, கடந்த செப்டம்பர் மாதத்தில், 2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.


கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், முதன்முறையாக பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விற்பனை பழைய நிலைக்கு திரும்பி இருப்பினும், டீசல் விற்பனை இன்னும் திரும்பவில்லை. கடந்த செப்டம்பரில், பெட்ரோல் விற்பனை, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 10.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.


டீசல் விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 7 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுஉள்ளது. இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 22 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பரில், பெட்ரோல் விற்பனை, 21.6 லட்சம் டன்னாக இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில், 22 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.


கடந்த ஆகஸ்டில் இதுவே, 19 லட்சம் டன்னாக குறைந்திருந்தது.டீசலை பொறுத்தவரை, கடந்தாண்டு செப்டம்பரில், 52 லட்சம் டன்னாக இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில், 48.4 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. கடந்த ஆகஸ்டில் இதுவே, 39.7 லட்சம் டன்னாக, மிகக் குறைவாக இருந்தது.பொருளாதார வளர்ச்சி மீட்சியை நோக்கி திரும்புவதால், எரிபொருள் விற்பனை விற்பனை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)