பதிவு செய்த நாள்
22 செப்2020
21:27
மும்பை:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, டாடா மோட்டார்ஸ், இதுவரை மூன்று லட்சம், ‘டியாகோ’ காரை தயாரித்திருப்பதாக தெரிவித்து உள்ளது.
நேற்று, 3வது லட்சமாவது காரை, குஜராத் ஆலையில் தயாரித்து வெளியிட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டியாகோ காரின் தயாரிப்பை, கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் துவங்கியது.இந்த காரின் வடிவமைப்புக்கான பணிகள் பிரிட்டன், இத்தாலி, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தின் வடிவமைப்பு மையங்களில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த கார், வழக்கமான மேனுவல் கியர் மாடலில் மட்டுமின்றி; ஆட்டோமெட்டிக் கியர் மாடலிலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.நடுத்தர ஹேட்ச்பேக் ரக காரான, டியாகோவின் தயாரிப்பு, இந்த குறுகிய காலத்தில் மூன்று லட்சத்தை எட்டிஉள்ளது குறித்து மகிழ்ச்சிஅடைவதாக, டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|