பதிவு செய்த நாள்
23 செப்2020
22:02
புதுடில்லி:முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீட்டெய்லில், அமெரிக்காவை சேர்ந்த, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, கே.கே.ஆர்., 5,550 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.
இதன் மூலம், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தின், 1.28 சதவீத பங்குகள், கே.கே.ஆர்., நிறுவனத்தின் வசம் வரும். ரிலையன்ஸ் நிறுவனத்தில், கே.கே.ஆர்., நிறுவனம் செய்யும் இரண்டாவது முதலீடாகும் இது.இதற்கு முன், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்மில், 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாய் முதலீடு செய்து, அந்நிறுவனத்தின், 2.32 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசை பொறுத்தவரை, அதன் ரீட்டெய்ல் வணிகத்தில் முதலீடு செய்யும், இரண்டாவது நிறுவனமாகும் கே.கே.ஆர்., நிறுவனம்.இதற்கு முன், இந்த மாத ஆரம்பத்தில், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, சில்வர் லேக் பார்ட்னர்ஸ், 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்து, 1.75 சதவீத பங்குகளை வாங்கியது.
சில்லரை விற்பனை பிரிவில், ரிலையன்ஸ் நிறுவனம் வேகமான விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது.ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம், 7 ஆயிரம் நகரங்களில், 12 ஆயிரம் ஸ்டோர்களை நடத்தி வருகிறது. கடந்த மே மாதத்தில், ஆன்லைன் மளிகை வினியோகத்துக்காக, ஜியோ மார்ட் நிறுவனத்தை துவங்கியது.
மேலும், சிறிய கடைக்காரர்களை ஈர்க்கும் வகையில், வாட்ஸ்ஆப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.அடுத்தகட்டமாக, கடந்த மாதம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை மற்றும் சரக்கு போக்குவரத்து வணிகத்தை, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது.
கடந்த, 1976ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட, கே.கே.ஆர்., நிறுவனம், 16.43 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது.இந்தியாவில், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களில், 37,750 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான தனியார் பங்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|