பதிவு செய்த நாள்
29 செப்2020
21:55
புதுடில்லி:அமேசான் நிறுவனத்தின், உலகளாவிய, ‘பிரைம் டே சேல்ஸ்’, அக்டோபர் 13ம் தேதி அன்று துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாத வாக்கில், ‘பிரைம் டே சேல்’ எனும், பிரதான நாள் விற்பனையை நடத்தும்.ஆனால் இம்முறை, கொரோனாவை முன்னிட்டு பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்ததால், தாமதமாக அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.
இந்த விற்பனை, அக்டோபர் 13ம் தேதி துவங்கி, 14ம் தேதி முடிவடையும். மொத்தம், 48 மணி நேரம் இந்த சிறப்பு விற்பனை நடக்கும்.கொரோனா பரவல் காரணமாக, ஷாப்பிங் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த வாய்ப்பு இருக்காது என கருதப்படுகிறது.
அமெரிக்கா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ். கனடா, சீனா, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில், உலக இணையதளம் மூலம் விற்பனை நடைபெற இருக்கிறது.இம்முறை இந்த சிறப்பு விற்பனை நாளில், மிகப் பெரிய அளவிலான தள்ளுபடிகளுடன் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|