பதிவு செய்த நாள்
30 அக்2020
21:46
திருப்பூர்:ஐரோப்பிய நாடுகளில், கொரோனா, இரண்டாவது பரவல் துவங்கியுள்ளதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினர் கவலை அடைந்துஉள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளிலிருந்து, ஆடை உற்பத்திக்கு அதிகளவில், ‘ஆர்டர்’ வரத்துவங்கியுள்ளன. இந்த நல்ல சூழலில், ஐரோப்பிய நாடுகளில், கொரோனா தன், இரண்டாவது பரவலை துவங்கியுள்ளதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளில், கடந்த இரண்டு நாட்களாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில், தேர்தலுக்குப்பின் அந்நாட்டிலும் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளது.
வெளிநாடுகளில் வர்த்தகம் பாதிக்கப்பட்டால், புதிய ஆர்டர் பெறுவது, ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டருக்கு ஆடை தயாரித்து அனுப்புவது, தொகை பெறுவது என, திருப்பூர் உட்பட நாடு முழுதும் உள்ள ஆடை ஏற்றுமதி துறையினர் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.தீபாவளி நெருங்குவதால், வங்கிகள், ஆடை உற்பத்தி துறையினருக்கு தேவையான அளவு, கூடுதல் கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|