பதிவு செய்த நாள்
06 நவ2020
21:58
ஐதராபாத்:‘அமேசான் வெப் சர்வீசஸ்’ நிறுவனம், இரண்டாவது கட்டமாக, இந்தியாவில் அதன் டேட்டா சென்டர் எனும், தரவுகளை சேகரிக்கும் மையங்களை அமைக்க இருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில், இந்த மையங்கள் அமைய இருக்கின்றன. இது, இந்தியாவில், இந்நிறுவனத்தின் இரண்டாவது தரவு பகுதியாகும்.இது குறித்து, தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ், ‘டுவிட்டரில்’ தெரிவித்து இருப்பதாவது:தெலுங்கானா சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், மிக அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீடு இதுவாகும்.
அமேசான் வெப் சர்வீசஸ், தெலுங்கானாவில், 20 ஆயிரத்து, 761 கோடி ரூபாய் முதலீட்டில், டேட்டா சென்டர்களை அமைக்க இருக்கிறது. இந்த மையங்கள், 2022ம் ஆண்டில் செயல் பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.ஐதராபாதில் அமைக்கப்படும் இந்த மையங்கள், உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் மையங்களுடன் இணைக்கப்படும்.
அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஒரு சக்தியாக நாங்கள் இருக்க விரும்புகிறோம், அதை நோக்கி நாங்கள் தொடர்ந்து செயல் படுகிறோம்.ஓராண்டல்ல, ஈராண்டல்ல; நீண்டகாலமாக நாங்கள் தொடந்து இருக்கும் வகையில், இந்தியாவில் கட்டமைப்புகளை உருவாக்கி, முதலீடுகளை செய்து வருகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|