பதிவு செய்த நாள்
08 டிச2020
22:18
புதுடில்லி:பாரத் பெட்ரோலியம் நிறுவனம், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட பிறகு,
அந்நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருப்போருக்கு, அரசின் மானிய சலுகை கிடைக்குமா; கிடைக்காதா என்ற குழப்பம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்நிறுவன உயரதிகாரிகள் கூறியதாவது:பாரத் பெட்ரோலியத்தை வாங்கும் நிறுவனம், சமையல் எரிவாயு வணிகத்தை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் தக்க வைத்துக் கொள்ள விரும்பும்பட்சத்தில், பாரத் பெட்ரோலிய வாடிக்கையாளர்களுக்கு, அரசின் மானிய உதவி அப்படியே தொடரும்.
மானியச் சலுகை
ஒருவேளை, புதிய நிறுவனம் சமையல் எரிவாயு வணிகத்தை தொடர விரும்பாதபட்சத்தில், வாடிக்கையாளர்கள் கணக்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான்
பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு மாற்றப்படும். மானியச் சலுகையும் தொடரும்.பாரத் பெட்ரோலியம் தனியார்மயமானாலும், நிறுவனத்தின், 7.3 கோடி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கான மானியத்தை தொடர்வதில் அரசு உறுதியாக இருக்கிறது.
இந்த குழப்பங்களை தவிர்க்கும்பொருட்டு, நிறுவனத்தின் சமையல் எரிவாயு வணிகத்தை, ஒரு புதிய துணை நிறுவனமாக்கி, அதன் கணக்குகளை தனியாக பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் உரிய கண்காணிப்புடன், மானியம் வழங்கப்படும்.
முடிவு
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வணிகத்தை தொடருவதா இல்லை, விடுவதா என்பது குறித்து புதிய நிறுவனங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|