விலை ஏற்றத்தால் விற்பனை இறங்குமுகம்விலை ஏற்றத்தால் விற்பனை இறங்குமுகம் ...  இந்தியாவை என்ன செய்யலாம்? மார்க் – அம்பானி உரையாடல்! இந்தியாவை என்ன செய்யலாம்? மார்க் – அம்பானி உரையாடல்! ...
ஓரியண்ட் எலெக்ட்ரிக்கின் விழிப்புணர்வு பிரசாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2020
19:56

2.4 பில்லியன் அமெரிக்க டாலர் விற்றுமுதல் ஈட்டும் பிர்லா குழுமத்தின் ஓர் அங்கமான ஓரியண்ட் எலெக்ட்ரிக் லிமிடெட், பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கவும், சிறு நகரங்கள் மற்றும் கிராம சந்தைகளைச் சென்றடையவும், தமிழகத்துக்கான நடமாடும் வாகன சேவையைத் தொடங்கி உள்ளது. இந்த ஸ்மார்ட் பிரசாரத்தின்போது, ஓரியண்ட்டின் மின் விசிறிகள், வீட்டு & சமையல் சாதனங்கள், கூலர்கள், வாட்டர் ஹீட்டர்கள், ஸ்விட்ச்கள், லைட்டிங்க், ஸ்விட்ச் கியர் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் காட்சிபடுத்தப்படும். பொது மக்கள், சில்லரை வர்த்தகர்கள், மின் பழுது நீக்குவோர் ஆகியோரைச் சென்றடையவும், பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பிரசாரம் உதவும்.

இது குறித்து ஓரியண்ட் எலெக்ட்ரிக் பிராண்ட் & கார்பொரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அன்ஷுமன் சக்ரவர்த்தி கூறுகையில், ‘கொள்ளை நோய் பரவலைத் தொடர்ந்து இது எங்களது முதல் தரை வழிச் செயல்பாடு ஆகும். தென் இந்தியா குறிப்பாகத் தமிழ்நாடு எங்களது மிகப் பெரிய சந்தைகளுள் ஒன்று என்பதுடன் மாநிலத்தில் எங்கள் பிராண்டுக்கு நல்ல அங்கீகாரமும், மதிப்பும் உண்டு. மாநிலத்தில் குறிப்பாக 3 & 4ஆம் நிலை நகரங்கள் மற்றும் வளரும் குடியிருப்புகளில் இன்னும் அதிக அளவில் ஊடுருவக் கணிசமான வாய்ப்புள்ளதாக உணர்ந்ததாலேயே ஓரியண்ட் ஸ்மார்ட் நடமாடும் வாகன சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

சம்மந்தப்பட்ட இடங்களிலுள்ள எங்கள் விற்பனைக் குழு உறுப்பினர்கள் வாகனத்தில் பயணித்து எங்கள் பொருள்களின் முக்கிய அம்சங்களையும், பலன்களையும், வாடிக்கையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், முகவர்கள், மின் பழுது நீக்குவோர் ஆகியோரிடம் விளக்குவார்கள். இந்த முனைவு மூலம் பிராண்டை வாடிக்கையாளர்களிடையே இன்னும் நெருக்கமாகக் கொண்டு செல்ல முடியும் என்பதுடன் தேவையை அதிகரிக்க உந்து சக்தியாகத் திகழ்வோம் என்றும் நம்புகிறோம். கோவிட்-19 கொள்ளை நோய் நிலவும் சூழலில் இச்செயல்பாட்டுக்கான நிலையான இயக்க நடைமுறையை அறிவிப்பதுடன், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்’ என்றார்.

ஓரியண்ட் எலெக்ட்ரிக்கின் ஸ்மார்ட் நடமாடும் வாகனம் அடுத்த இரு மாதங்களில் மாநிலத்தின் 40க்கும் அதிகமான நகரங்களுக்கும், சிறு நகரங்களுக்கும் பயணிப்பதன் மூலம் பொருள் குறித்து அனுபவத்தைப் பெற நுகர்வோர்க்கு முதற்கட்ட வாய்ப்பை வழங்கும். வரும் கோடைக் காலத்திலும் இச்செயல்பாட்டை மேலும் விரிவு படுத்துவதே திட்டமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)