பதிவு செய்த நாள்
15 டிச2020
20:35
புதுடில்லி:கொரோனா பாதிப்பால், குடும்பங்களின் சேமிப்பு குறைந்து விட்டதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில், 68 சதவீதத்தினர், கடந்த, எட்டு மாதங்களில், தங்களுடைய சேமிப்பு குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
‘லோக்கல் சர்கிள்ஸ்’ எனும் சமூக ஊடக நிறுவனம், நுகர்வோரின் மனநிலை குறித்து அறிந்து கொள்ள, 302 மாவட்டங்களில், 44 ஆயிரம் பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு, சம்பள குறைப்பு, தாமதமான சம்பளம் ஆகியவற்றால், குடும்பங்களின் சேமிப்பு, குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
இருப்பினும், 50 சதவீதம் பேர், அடுத்த நான்கு மாதங்களில் தங்கள் விருப்பப்படி பொருட்கள் அல்லது சொத்துக்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.விரைவில் கடந்த ஆண்டு நிலைக்கு திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையுடன் பலர் இருப்பதும், ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|