பதிவு செய்த நாள்
10 ஜன2021
01:57
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை, தொடர்ந்து நான்காவது மாதமாக, கடந்த டிசம்பரிலும் அதிகரித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வருவதை அடுத்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பரில், 11 மாதங்களில் இல்லாத வகையில், தேவை அதிகரித்துள்ளது.
இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இது, 2 சதவீதம் குறைவாகும்.இது குறித்து, பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளதாவது:பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை, டிசம்பர் மாதத்தில், அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது.இருப்பினும், கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.
பெட்ரோலின் தேவை, கடந்த செப்டம்பரில், கொரோனா காலத்துக்கு முந்தைய நிலைக்கு திரும்பிவிட்டாலும், டீசல், அக்டோபரில் தான் திரும்பியது. ஆனாலும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சரிவைக் கண்டுள்ளது. டிசம்பரில், டீசல் தேவை, 2.7 சதவீதம் சரிந்துள்ளது. சமையல் எரிவாயுவை பொறுத்தவரை, டிசம்பரில், 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|