பதிவு செய்த நாள்
13 ஜன2021
20:59
புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத் தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் குறைந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி, அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகிதத்தை குறைக்காது என எதிர்பார்ப்பதாக, தரகு நிறுவனமான, மோதிலால் ஆஸ்வால் தெரிவித்துஉள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா பரவல் ஏற்பட்ட பிறகு, முதன் முறையாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 4.59 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த, 14 மாதங்களில் இல்லாத குறைவாகும். சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் சவுகரியமான இலக்கு, 2 சதவீதத்திலிருந்து, 6 சதவீதம் வரை ஆகும்.
தற்போது சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் வந்துள்ளது. இந்நிலையில், இனி, ரிசர்வ் வங்கியிடம்இருந்து வட்டி குறைப்பை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|