மீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து மீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து ...  வருமான வரி திட்டமிடலில்  கவனிக்க வேண்டிய அம்சங்கள் வருமான வரி திட்டமிடலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்த முன் அனுமதி தேவையில்லை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
21:14

புதுடில்லி:மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்துவதற்கு முதலீட்டாளர்கள் முன் ஒப்புதல் கட்டாயமாக்கப்படக் கூடாது என்றும்; அது குறித்த முடிவை, நிர்வகிப்பவர்களே மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும் என்றும், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.

பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், திடீரென அதன், 6 மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்தது. இது குறித்து, முதலீட்டாளர்களிடம் எந்த விதமான ஒப்புதலும் கோரப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து, தற்போது, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் சிறப்பு மனு மூலம், முதலீட்டாளர்களின் முன் ஒப்புதல் தேவையில்லை என, ஆம்பி தெரிவித்துள்ளது.முதலீட்டாளர்கள், நம்பிக்கையின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டுகளில் தங்களது பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

உத்தரவாதமான வருமானம் இல்லாமலும்; சந்தை ஆபத்துக்களுக்கு உட்பட்டதுமாக முதலீடுகள் இருக்கும் நிலையில், அவற்றை நிர்வகிப்பவர்கள் எடுக்கும் முடிவே சரியானதாக இருக்கும் என்று ‘ஆம்பி’ தெரிவித்து உள்ளது.

அதிலும், கொரோனா போன்ற எதிர்பாராத கட்டங்களில் முதலீட்டாளர்களின் நலனை காக்கும் வகையில் முடிவு எடுப்பது, மற்றவர்களுக்கு கடினமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் இத்திட்டங்களை நிறுத்துவது குறித்து, முதலீட்டாளர் களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அதை தங்களிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.இதனையடுத்து, வாக்கெடுப்பு நடைபெற்று, நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. நாளை மீண்டும் விசாரணை துவங்குகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)