மீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து மீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து ...  வருமான வரி திட்டமிடலில்  கவனிக்க வேண்டிய அம்சங்கள் வருமான வரி திட்டமிடலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க உதவின’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
21:19

சென்னை:கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பினால் மிகவும் கடினமான காலகட்டமாக அமைந்தது என்றும், ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கைகள், பொருளாதார பாதிப்புகளை குறைப்பதற்கு உதவியது என்றும், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

பாதிப்புசென்னை நிகழ்ச்சி ஒன்றுக்காக, காணொலி மூலம் கலந்து கொண்டவர், இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது:இப்போது பின்னால் திரும்பி பார்த்தால், ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், பொருளாதார பாதிப்புகளை எளிதாக்க எவ்வளவு துாரம் உதவியாக இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

நிதி ஸ்திரத்தன்மை என்பது, பொதுவாக அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும். அதன் வலுவான தன்மை, அதனுடன் தொடர்புடைய அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டும். பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சியை நாம் ஆதரிக்க வேண்டும். நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

நிதி ஸ்திரத்தன்மையில் சமரசம் செய்யாமல், வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க, ரிசர்வ் வங்கி உறுதியுடன் உள்ளது.நாங்கள் அனைத்து வங்கிகளையும், வங்கி சாரா நிதி நிறுவனங்களையும், கொரோனா பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யுமாறு அறிவுரை வழங்கினோம். குறிப்பாக, அவற்றின் பண இருப்பு நிலை, பணப்புழக்கம்.கொரோனாசொத்துக்களின் தரம், மூலதனம் போன்றவற்றில் கொரோனாவின் பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யச் சொன்னோம்.புத்திசாலித்தனமாக ஒரு சில பெரிய பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் ஏற்கனவே தேவையான மூலதனத்தை திரட்டி உள்ளன. மேலும், தீங்கற்ற வழிகளில் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)