பதிவு செய்த நாள்
20 ஜன2021
21:36
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ , ‘ஜிம்னி’ வாகனத்தை, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யத் துவங்கிஉள்ளது. முதற்கட்டமாக, 184 வாகனங்கள், முந்த்ரா துறைமுகத்திலிருந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு, குறிப்பாக, கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த ஜிம்னி கார், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.மூன்று கதவுகள் கொண்ட இந்த வாகனத்தை, ஜப்பானைச் சேர்ந்த, ‘சுசூகி’ நிறுவனம், மாருதி சுசூகி மூலமாக தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.ஜிம்னி வாகனத்துக்கு உலகளவில் அதிக தேவைகள் இருந்தாலும், அதற்கேற்ப சுசூகி நிறுவனத்தால் தயாரிக்க முடியவில்லை. இதையடுத்து, சுசூகி நிறுவனம், மாருதி சுசூகி மூலமாகவும் இந்த கார்களை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|