பதிவு செய்த நாள்
28 ஜன2021
00:26
புதுடில்லி:‘ஆப்பிள்’ நிறுவனம், அதன், ‘ஐபோன்’, ‘மேக்’, ‘ஐபேட்ஸ்’ ஆகியவற்றை இந்தியாவிலும், வியட்னாமிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பைடன் பதவி ஏற்றதை தொடர்ந்து, சீனாவுடனான அமெரிக்க வர்த்தக உறவு மேம்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையிலும், ‘ஆப்பிள்’ இம்முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிபர் மாறியும், ‘ஆப்பிள்’ முடிவு மாறவில்லை.
‘ஆப்பிள்’ நிறுவனம், நடப்பு ஆண்டின் மத்தியில், ‘ஐபேடு’களை, வியட்னாமில் தயாரிக்கும் என்றும், இந்தியாவில், ‘ஐபோன் 12’ வரிசையில், 5ஜி போன்களை, நடப்பு காலாண்டில் தயாரிக்க துவங்கும் என்றும், அமெரிக்க பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும், இயர்போன்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை, சீனாவிலிருந்து தயாரிப்பதற்குப் பதிலாக, வேறு நாடுகளிலிருந்து தயாரிக்கும் திட்டத்திலும், ‘ஆப்பிள்’ இறங்கி உள்ளது.
அத்துடன், ‘மேக்புக்’ தயாரிப்பு, வியட்னாமிற்கும், ‘மேக்மினி’ தயாரிப்பு, மலேசியாவுக்கும் இடம் மாறும் என்றும் சொல்லப்படுகிறது.‘ஆப்பிள்’ மட்டுமின்றி, பல தொழில்நுட்ப நிறுவனங்கள், சீனாவிலிருந்து வெளியேறிவிடும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|