பதிவு செய்த நாள்
28 ஜன2021
00:28
புதுடில்லி:சீனாவைச் சேர்ந்த, ‘டிக்டாக்’ செயலியின் தாய் நிறுவனமான, ‘பைட்டான்ஸ்’, இந்தியாவில், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை, கணிசமாக குறைத்துவிட முடிவு செய்துள்ளது.
அண்மையில், சீனாவை சேர்ந்த, ‘டிக்டாக்’ உள்ளிட்ட, 59 செயலிகளை, இந்தியா தடைசெய்தது. இதையடுத்து, மீண்டும் இந்தியாவில் வணிகத்தை தொடருவதற்கான பல்வேறு முயற்சிகளை, ‘டிக்டாக்’ எடுத்து வந்தது. ஆனால், தடை நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குறைந்து, மீண்டும் எப்போது செயல்பாட்டுக்கு வரமுடியும் என்பது உறுதியாக தெரியாததால், ஆட்குறைப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே, எல்லையில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, பல, சீன செயலிகள் தடை செய்யப் பட்டன. இந்த தடை தற்காலிகமாகத்தான் இருக்கும்; விரைவில் நிலைமை சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தோம்.
ஆனால், தடையை நீக்கும் எண்ணத்தில் அரசு இல்லை என்பதால், இந்தியாவில், ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மீண்டும் இந்தியாவில் எங்களது செயல்பாடு எப்போது துவங்கும் என்பது தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|