கொரோனா காப்பீட்டு பாலிசிகள் 1.28 கோடி பேர் எடுத்துள்ளனர் கொரோனா காப்பீட்டு பாலிசிகள் 1.28 கோடி பேர் எடுத்துள்ளனர் ...  நாளை தங்க பத்திர வெளியீடு ஒரு கிராம் 4,912 ரூபாய் நாளை தங்க பத்திர வெளியீடு ஒரு கிராம் 4,912 ரூபாய் ...
‘டாடா’ கோரிக்கையை ஏற்காத ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
21:27

புதுடில்லி:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை வாங்குவதற்கு, ‘டாடா’ குழுமம் முயற்சி செய்து வரும் நிலையில், ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ அம்முயற்சியில் இணையாது என தெரிய வந்து உள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் சேர்ந்து, ஏலத்தில் எடுக்க, டாடா குழுமம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தயாராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஏர் இந்தியா

இது குறித்து, விபரம்அறிந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து, ஏற்கனவே, ‘விஸ்டாரா’ எனும் விமான சேவையை வழங்கி வருகிறது. இதனால், கூட்டுத் தொழிலான விஸ்டாரா மூலமாக, ஏர் இந்தியாவை ஏலம் எடுக்க, டாடா முயற்சித்தது.ஆனால், முயற்சி கைகூடவில்லை. இருப்பினும், விஸ்டாராவுக்கு எதிரான வியாபார போட்டி முயற்சியில், டாடா இறங்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வதாகவும், தனியாக, ஏர் இந்தியாவை, டாடா கையகப்படுத்திக் கொள்வதில் எந்த தடையும் இல்லை எனவும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்து உள்ளது.

நீண்ட காலம்

ஏர் இந்தியாவை, லாபப் பாதைக்கு திருப்ப, நீண்ட காலமும், அதிக முதலீடும் தேவைப்படும் என்பதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டை, டாடா மிகவும் எதிர்பார்த்தது. ஆனால், நினைத்தது நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இருப்பினும், டாடா தரப்பிலிருந்தோ அல்லது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரப்பிலிருந்தோ இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)