பதிவு செய்த நாள்
29 ஜன2021
21:27
புதுடில்லி:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை வாங்குவதற்கு, ‘டாடா’ குழுமம் முயற்சி செய்து வரும் நிலையில், ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ அம்முயற்சியில் இணையாது என தெரிய வந்து உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் சேர்ந்து, ஏலத்தில் எடுக்க, டாடா குழுமம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தயாராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஏர் இந்தியா
இது குறித்து, விபரம்அறிந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து, ஏற்கனவே, ‘விஸ்டாரா’ எனும் விமான சேவையை வழங்கி வருகிறது. இதனால், கூட்டுத் தொழிலான விஸ்டாரா மூலமாக, ஏர் இந்தியாவை ஏலம் எடுக்க, டாடா முயற்சித்தது.ஆனால், முயற்சி கைகூடவில்லை. இருப்பினும், விஸ்டாராவுக்கு எதிரான வியாபார போட்டி முயற்சியில், டாடா இறங்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வதாகவும், தனியாக, ஏர் இந்தியாவை, டாடா கையகப்படுத்திக் கொள்வதில் எந்த தடையும் இல்லை எனவும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்து உள்ளது.
நீண்ட காலம்
ஏர் இந்தியாவை, லாபப் பாதைக்கு திருப்ப, நீண்ட காலமும், அதிக முதலீடும் தேவைப்படும் என்பதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டை, டாடா மிகவும் எதிர்பார்த்தது. ஆனால், நினைத்தது நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இருப்பினும், டாடா தரப்பிலிருந்தோ அல்லது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரப்பிலிருந்தோ இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|