பதிவு செய்த நாள்
24 பிப்2021
21:25
புதுடில்லி:வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, ‘சோனா காம்ஸ்டார்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, ‘பிளாக்ஸ்டோன்’ நிறுவனத்துக்கு சொந்தமானதாகும், இந்நிறுவனம்.நடப்பு ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை, பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டும் முதல் வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் இது தான்.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, கடன்களை அடைக்கவும், மீதியை எதிர்கால முதலீட்டு தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்தின், 65 சதவீத பங்குகள், ‘பிளாக்ஸ்டோன்’ வசம் உள்ளன.இந்நிறுவனத்துக்கு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மொத்தம், 9 தொழிற்சாலைகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|