பதிவு செய்த நாள்
02 மார்2021
06:06
புதுடில்லி : கடந்த பிப்ரவரியில், தயாரிப்பு துறை வளர்ச்சி குறியீடு, 0.2 புள்ளிகள் குறைந்த போதிலும், தொடர்ந்து நிலையான முன்னேற்றம் கண்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா’ நிறுவனத்தின் பொருளாதார துணை இயக்குனர் பாலியன்னா டி லிமா கூறியதாவது:ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பு துறை வளர்ச்சி குறியீடு, பிப்ரவரியில், 57.5 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது ஜனவரியில், 57.7 புள்ளிகளாக இருந்தது. 0.2 புள்ளிகள் குறைந்துள்ள போதிலும், தயாரிப்பு துறை, நிலையான முன்னேற்றம் கண்டு வருகிறது.
இத்துறையில், பிப்ரவரியில் புதிய, ‘ஆர்டர்’கள் அதிகம் வந்துள்ளன. தயாரிக்கப்பட்ட முழுமையான பொருட்களின் கையிருப்பு குறைந்துள்ளது. அதனால், தேவைப்பாடு அதிகரித்து வருவது தெரிகிறது. அதேசமயம், முழுமை பெறாத தயாரிப்பு பொருட்களின் இருப்பும் அதிகரித்துள்ளது. அதனால், அடுத்த ஓராண்டிற்கு உற்பத்தி குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும் என, தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம்:
நடப்பு, 2020 – 21ம் நிதியாண்டின், முதல் இரு காலாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பின்னடைவில் இருந்தது. இந்நிலையில், விவசாயம், தயாரிப்பு, சேவைகள் மற்றும் கட்டுமான துறைகள் சிறப்பாக எழுச்சி கண்டு வருகின்றன. இதன் காரணமாக, அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
– ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|