பதிவு செய்த நாள்
06 ஏப்2021
21:15
புதுடில்லி:வட்டி குறைப்பு விஷயத்தில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகளை விட, அதிகளவில் வட்டியை குறைத்துள்ளன.
கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்தன.இதில், ரிசர்வ் வங்கி, பல வட்டி குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அறிவித்து வந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தும், அதன் பலன் மக்களை சேரும் வகையிலான நடவடிக்கைகளை, பல வங்கிகள் எடுக்கவில்லை.
குறிப்பாக தனியார் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கி, வட்டியை குறைத்தும் தங்களுடைய வட்டி விகிதத்தை அந்த அளவுக்கு குறைக்கவில்லை.ரிசர்வ் வங்கியின் தரவுகளிலிருந்து, இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.ரிசர்வ் வங்கி, 1.15 சதவீதம் வட்டியை குறைத்த போது, பொதுத்துறை வங்கிகள், 1.14 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்துள்ளன. இவ்வங்கிகளில், கடந்த ஆண்டு மார்ச்சில், 8.64 சதவீதமாக இருந்த வட்டி, இந்த ஆண்டு பிப்ரவரியில், 7.5 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆனால் தனியார் துறை வங்கிகள், 0.38 சதவீதம் அளவுக்கு மட்டுமே வட்டி குறைப்பை செய்துள்ளன. வெளிநாட்டு வங்கிகள், 0.63 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|