பதிவு செய்த நாள்
07 மே2021
18:48
புதுடில்லி:‘கிரிப்டோகரன்சி’ எனப்படும், மெய்நிகர் நாணயங்களை அரசு அனுமதிக்க வேண்டும் என, முன்னாள் நிதித்துறை செயலர் எஸ்.சி. கார்க் கூறியுள்ளார்.
வர்த்தக தொழிலக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக பங்கேற்ற அவர், ‘பிட்காய்ன்’ போன்ற மெய்நிகர் நாணயங்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:மெய்நிகர் நாணயங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த முழு தெளிவும் நமக்கு இன்னும் வரவில்லை என, நான் நினைக்கவில்லை. அவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றை செய்யுங்கள். ஆனால், அந்த சொத்துக்களை, சேவைகளை அனுமதிக்கலாம்; ஊக்குவிக்கலாம்.அனைத்து இந்திய நிறுவனங்களும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், டிஜிட்டல் கணக்குகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
மேலும், தேசிய கணக்குகளுடன் நிறுவனத்தின் கணக்குகளை ஒருங்கிணைக்க முடியும். தற்போது நம்மிடம் காலாண்டு கணக்கியல் முறை தான் உள்ளது. இதனால், நிறுவனங்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு பின் தங்கள் கணக்கு புத்தகத்தை காட்ட வேண்டியது இருக்கிறது.
பதிலாக, நாம் கணக்கியல் தரத்தை அதிகரிக்க வேண்டும். வணிகத்தின் தற்போதைய தேவைகளுக்கு பொருத்தமான, தானியங்கி கணக்கியல் முறைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|