பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘நுவோகோ விஸ்டாஸ்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘நுவோகோ விஸ்டாஸ்’ நிறுவனம் ...  ‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரம் வங்கிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் ‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரம் வங்கிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பிட்காய்னை அரசு அனுமதிக்கலாம் முன்னாள் நிதித்துறை செயலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2021
18:48

புதுடில்லி:‘கிரிப்டோகரன்சி’ எனப்படும், மெய்நிகர் நாணயங்களை அரசு அனுமதிக்க வேண்டும் என, முன்னாள் நிதித்துறை செயலர் எஸ்.சி. கார்க் கூறியுள்ளார்.

வர்த்தக தொழிலக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக பங்கேற்ற அவர், ‘பிட்காய்ன்’ போன்ற மெய்நிகர் நாணயங்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:மெய்நிகர் நாணயங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த முழு தெளிவும் நமக்கு இன்னும் வரவில்லை என, நான் நினைக்கவில்லை. அவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றை செய்யுங்கள். ஆனால், அந்த சொத்துக்களை, சேவைகளை அனுமதிக்கலாம்; ஊக்குவிக்கலாம்.அனைத்து இந்திய நிறுவனங்களும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், டிஜிட்டல் கணக்குகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

மேலும், தேசிய கணக்குகளுடன் நிறுவனத்தின் கணக்குகளை ஒருங்கிணைக்க முடியும். தற்போது நம்மிடம் காலாண்டு கணக்கியல் முறை தான் உள்ளது. இதனால், நிறுவனங்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு பின் தங்கள் கணக்கு புத்தகத்தை காட்ட வேண்டியது இருக்கிறது.

பதிலாக, நாம் கணக்கியல் தரத்தை அதிகரிக்க வேண்டும். வணிகத்தின் தற்போதைய தேவைகளுக்கு பொருத்தமான, தானியங்கி கணக்கியல் முறைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)