பதிவு செய்த நாள்
02 ஜூன்2021
21:48
மும்பை:நாட்டின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில், 67.39 சதவீதம் அதிகரித்துள்ளது. பொறியியல் பொருட்கள், மருந்து, பெட்ரோலிய பொருட்கள், ரசாயனம் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில், 2.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, 67.39 சதவீதம் உயர்வாகும்.கடந்த ஆண்டு மே மாதத்தில் ஏற்றுமதி, 1.40 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே மேற்கொள்ளப்பட்டிருந்தது.கடந்த மே மாதத்தில் ஏற்றுமதி மட்டுமின்றி, இறக்குமதியும் அதிகரித்துள்ளது.
2.81 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது, 68.54 சதவீத அதிகரிப்பாகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் 1.67 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே இறக்குமதி நடைபெற்று உள்ளது.கடந்த மே மாதத்தில் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், வர்த்தக பற்றாக்குறை, 46 ஆயிரத்து 136 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த மே மாதத்தில், இறக்குமதியை பொறுத்தவரை, கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை, பொறியியல் பொருட்கள், மருந்து, பெட்ரோலிய பொருட்கள், ரசாயனம் ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி ஆகியுள்ளன. இவ்வாறு மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|