பதிவு செய்த நாள்
04 ஜூன்2021
19:21
கொச்சி:கேரளாவைச் சேர்ந்த, ஈசாப் சிறு நிதி வங்கி, ஜூலையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிடுகிறது. இதையடுத்து, விரைவில் மீண்டும், ‘செபி’க்கு விண்ணப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈசாப் வங்கி, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்து, 976 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. இதற்காக, கடந்த ஆண்டு ஜனவரியில் அனுமதி கோரி, செபிக்கு விண்ணப்பித்து இருந்தது. ஆனால், கொரோனா முதல் அலை காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. இப்போது மீண்டும் பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டு உள்ளது.
எனவே, விரைவில் மீண்டும் விண்ணப்பிக்கும் என தெரிகிறது.இந்த வங்கிக்கு, ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, அதன் பங்குதாரர்களின் வசம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும்; புதிய பங்கு வெளியீட்டுக்கு வரவும், இன்னும் ஒரு மாத அவகாசமே இருக்கிறது.
ரிசர்வ் வங்கி விதிப்படி, 500 கோடி ரூபாய் நிகர மதிப்பை எட்டியதிலிருந்து, மூன்று ஆண்டுகளுக்குள், பங்குச் சந்தையில் வங்கியை பட்டியலிட வேண்டும். எனவே, அடுத்த மாதத்தில் இவ்வங்கி பங்கு வெளியீட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|