பதிவு செய்த நாள்
05 ஜூன்2021
19:33
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, இதுவரை இல்லாத வகையில், 43.67 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ். அப்போது அவர், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, தற்போதைய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில், ஏற்கனவே, 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிவிட்டது என்று நம்புவதாக தெரிவித்தார்.
அதாவது, கையிருப்பு, 43.80 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை தாண்டியிருக்கும் என தெரிவித்திருந்தார்.இந்நிலையில், கடந்த மே மாதம், 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு, 47.67 லட்சம் கோடி ரூபாய் என்ற உயரத்தை தொட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் தங்கத்தின் இருப்பு, மதிப்பீட்டு வாரத்தில், 1,935 கோடி ரூபாய் அதிகரித்து, 2.78 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|