பதிவு செய்த நாள்
11 ஜூன்2021
22:02
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி, முதன் முறையாக 600 பில்லியன் டாலர் என்ற நிலையை தாண்டி உச்சம் தொட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 43.80 லட்சம் கோடி ரூபாய்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர், அண்மையில் நடைபெற்ற பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பின்போது, நாட்டின் அன்னிய செலாவணி விரைவில் 600 பில்லியன் டாலர் என்ற நிலையை எட்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் கூறியபடியே கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி 600 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், அதாவது மே 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு 598 பில்லியன் டாலராக இருந்தது.தற்போதைய உயர்வுக்கு, வெளிநாட்டு பண இருப்பு மதிப்பு அதிகரித்தது ஒரு காரணமாக அமைந்துள்ளது.நாட்டின் தங்கத்தின் இருப்பு 3,665 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்து, 2.74 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|