கொரோனா பாதிப்பை மீறி ‘சென்செக்ஸ்’ சாதனை பயணம் கொரோனா பாதிப்பை மீறி ‘சென்செக்ஸ்’ சாதனை பயணம் ...  ‘டோட்லா டெய்ரி’ நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது ‘டோட்லா டெய்ரி’ நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் எரிபொருள் தேவை மே மாதத்தில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
00:44

புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை, மே மாதத்தில், கடந்த, 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள் மற்றும் நின்றுபோன பொருளாதார செயல்பாடுகள் காரணமாக, எரிபொருள் தேவையானது, மதிப்பீட்டு மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து, மத்திய அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டம் மற்றும் பகுப்பாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டு மே மாதத்தில், நாடு முழுவதிலும் மிக கடுமையான ஊரடங்கு காரணமாக, பொருளாதார செயல்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டது.நடப்பு ஆண்டு மே மாதத்தில், நோய்தொற்று அதிகமாக இருந்த போதிலும், ஊரடங்கு அந்தந்தபகுதிகளுக்கு ஏற்ப பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், பல தொழிற்சாலைகளும் இயங்கின.இதனால், பெட்ரோல் நுகர்வு, கடந்த ஆண்டு மே மாதத்தை விட, 12 சதவீதம் அதிகமாக உள்ளது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 16 சதவீதம் சரிவாகும். மேலும், தொற்றுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 27 சதவீதம் சரிவாகும்.

டீசலை பொறுத்தவரை, கடந்த ஏப்ரலுடன் ஒப்பிடும்போது, 17 சதவீதம் சரிவை கண்டுள்ளது. விமான பயணத்துக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள், 36 சதவீதம் சரிந்துள்ளது.இருப்பினும், சமையல் எரிவாயு தேவையில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி, ஏப்ரல் நிலையே தொடர்கிறது.

ஆனாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 5.5 சதவீதம் சரிவாகும். இதற்கு காரணம், அரசு தொற்று பாதிப்பை முன்னிட்டு, நிவாரண பொருட்களுடன் சிலிண்டர்களையும் வழங்கியதாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)