பதிவு செய்த நாள்
29 ஜூன்2021
02:38
புதுடில்லி : ‘டெஸ்லா’ கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க்கின், சுயசரிதம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த சுயசரிதத்தை, அமெரிக்க எழுத்தாளரான வால்ட்டர் ஐசக்சன் எழுதுவார் என தெரிகிறது.
சுயசரிதை எழுதுவது சம்பந்த மாக, வால்ட்டர் ஐசக்சன் சமீபத்தில் எலான் மஸ்க்கை சந்தித்து பேசி இருப்பதாக, ‘பாக்ஸ் பிசினஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.‘ஆப்பிள்’ நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் சுயசரிதத்தை எழுதியவர் தான் இந்த வால்ட்டர் ஐசக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2011ம் ஆண்டில், ஸ்டீவ் ஜாப்ஸ் சுயசரிதம் பிரசுரமாகி, 30 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது.இது குறித்து ஐசக்சன் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் “ஏதோ ஒருவகையில் எலான் மஸ்க் இந்த காலத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக இருக்கிறார். ‘‘அவர் உலகை மாற்ற முடியும் என்று நினைக்கும் அளவுக்கு சிந்தனை படைத்தவராக இருக்கிறார். இதனால் அவர் உலகை மாற்றுபவர்களில் ஒருவராக இருக்கக்கூடும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|