பதிவு செய்த நாள்
30 ஜூன்2021
20:17
புதுடில்லி:கொரோனா பரவலை தடுப்பதற்காக இனி ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், அது வணிகங்களையும், வேலைவாய்ப்புகளையும் நிச்சயமாக பாதிக்கும்; பொருளாதாரத்தையும் முடக்கும் என, ‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கூறியுள்ளார்.
நம்பிக்கை
கிட்டத்தட்ட 83 வயதாகும் ராகுல் பஜாஜ், ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், நிறுவனத்தின் தலைவராக, பங்குதாரர்களுக்கான தன்னுடைய கடைசி உரையை கடிதம் வாயிலாக வழங்கி உள்ளார்.மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் என பெயரெடுத்தவர் ராகுல் பஜாஜ். கடிதத்தில் அவர் முக்கியமாக குறிப்பிட்டுள்ளதாவது:
தடுப்பூசிகள் அதிகம் போடப்படுவது, முக கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றின் வாயிலாக, அடுத்து வரும் அலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இனி, இதற்கு முன் நடந்தது போல, ஊரடங்கு கள் அறிவிக்கப்பட மாட்டாது என நம்புகிறேன்.
கடைசி கடிதம்
ஊரடங்கால் நோய் தொற்று பரவலை வரம்புக்குள் கொண்டு வர முடியவில்லை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அவை பொருளாதாரத்தை நிச்சயமற்ற நிலைக்கு கொண்டு வந்தன. ஏழைகள், தினக்கூலிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்; மக்களிடையே அச்ச உணர்வும் அதிகரித்தது.இனி ஊரடங்குகள் இன்றி சமாளிக்கலாம் எனக் கருதுகிறேன். இவ்வாறு அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் பஜாஜ் ஆட்டோவின் தலைமை பொறுப்பை வகித்த அனுபவம் கொண்டவர் ராகுல் பஜாஜ்.தனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், நிறுவனத்தின் தலைவராக, கடைசி கடிதத்தை எழுதி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|