‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’க்கு சிறந்த வினியோகஸ்தர் விருது ‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’க்கு சிறந்த வினியோகஸ்தர் விருது ... கிரானிடோவின் கிரிஸ்டல் செராமிக்ஸ் விரிவாக்க பணிகள் நிறைவு கிரானிடோவின் கிரிஸ்டல் செராமிக்ஸ் விரிவாக்க பணிகள் நிறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இனி ஊரடங்குகள் வேண்டாம் ராகுல் பஜாஜ் உருக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2021
20:17

புதுடில்லி:கொரோனா பரவலை தடுப்பதற்காக இனி ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், அது வணிகங்களையும், வேலைவாய்ப்புகளையும் நிச்சயமாக பாதிக்கும்; பொருளாதாரத்தையும் முடக்கும் என, ‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கூறியுள்ளார்.

நம்பிக்கை

கிட்டத்தட்ட 83 வயதாகும் ராகுல் பஜாஜ், ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், நிறுவனத்தின் தலைவராக, பங்குதாரர்களுக்கான தன்னுடைய கடைசி உரையை கடிதம் வாயிலாக வழங்கி உள்ளார்.மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் என பெயரெடுத்தவர் ராகுல் பஜாஜ். கடிதத்தில் அவர் முக்கியமாக குறிப்பிட்டுள்ளதாவது:

தடுப்பூசிகள் அதிகம் போடப்படுவது, முக கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றின் வாயிலாக, அடுத்து வரும் அலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இனி, இதற்கு முன் நடந்தது போல, ஊரடங்கு கள் அறிவிக்கப்பட மாட்டாது என நம்புகிறேன்.

கடைசி கடிதம்

ஊரடங்கால் நோய் தொற்று பரவலை வரம்புக்குள் கொண்டு வர முடியவில்லை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அவை பொருளாதாரத்தை நிச்சயமற்ற நிலைக்கு கொண்டு வந்தன. ஏழைகள், தினக்கூலிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்; மக்களிடையே அச்ச உணர்வும் அதிகரித்தது.இனி ஊரடங்குகள் இன்றி சமாளிக்கலாம் எனக் கருதுகிறேன். இவ்வாறு அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் பஜாஜ் ஆட்டோவின் தலைமை பொறுப்பை வகித்த அனுபவம் கொண்டவர் ராகுல் பஜாஜ்.தனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், நிறுவனத்தின் தலைவராக, கடைசி கடிதத்தை எழுதி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)