பதிவு செய்த நாள்
09 ஜூலை2021
20:27
புதுடில்லி:கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து மீட்சி பெறுவதற்கான அறிகுறிகளை, பொருளாதாரம் காட்டத் தொடங்கியுள்ளதாக, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மீட்சிக்கு, இலக்குடன் கூடிய நிதிச் சலுகைகள், நிதிக் கொள்கைகள் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவை காரணங்களாக அமைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, நிதியமைச்சகம் தன்னுடைய மாதாந்திர பொருளாதார அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:ஊக்கச் சலுகைகள்இரண்டாவது அலையின் பாதிப்பை தணிக்கும் வகையில், பரந்த அளவிலான பொருளாதார நிவாரணமாக, 6.29 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும், ரிசர்வ் வங்கியும் சந்தையின் போக்கை அமைதிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.சுகாதாரம் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில், எட்டு நிவாரண திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சுற்றுலா துறைக்கு ஊக்க சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. 5 லட்சம் சுற்றுலா விசா, கட்டணமின்றி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன் மதிப்பு, 100 கோடி ரூபாயாகும்.மேலும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச் சலுகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.கிராமப்புற தேவைகள் ‘ஆத்ம நிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா’ திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவதன் மூலம், நுகர்வு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் உத்தரவாத திட்டம், இலவச உணவு தானியங்கள், வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றால் கிராமப்புறங்களில் தேவைகள் அதிகரிக்கும்.தடுப்பூசியை போடுவதை விரைவுபடுத்துவது, நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கு இடையேயான உள்கட்டமைப்பு இடைவெளியை குறைப்பது ஆகியவை இந்திய பொருளாதாரத்தின் நீடித்த மீட்புக்கு வழிவகுக்கும்.நல்ல பருவமழை, படிப்படியாக உயரும் பருவகால விதைப்பு, மாநிலங்களில் ஊரடங்குகளை தளர்த்துவது ஆகியவற்றால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு விரைவில் தணியும் என எதிர்பார்க்கலாம்.
இருப்பினும், உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு, உலகளாவிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் பாதிப்புகள் இருக்கும். உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, ஜூன் மாதத்திலிருந்து மேல் நோக்கிய பாதையில் அது தொடர்கிறது. இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|