மியூச்சுவல் பண்டு திட்டங்கள் ஜூனில் முதலீடுகள் அதிகரிப்பு மியூச்சுவல் பண்டு திட்டங்கள் ஜூனில் முதலீடுகள் அதிகரிப்பு ...  தங்க நகை அடமான கடன் நிதி நிறுவனங்கள் தத்தளிப்பு தங்க நகை அடமான கடன் நிதி நிறுவனங்கள் தத்தளிப்பு ...
பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் நிதியமைச்சகம் அறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2021
20:27

புதுடில்லி:கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து மீட்சி பெறுவதற்கான அறிகுறிகளை, பொருளாதாரம் காட்டத் தொடங்கியுள்ளதாக, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மீட்சிக்கு, இலக்குடன் கூடிய நிதிச் சலுகைகள், நிதிக் கொள்கைகள் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவை காரணங்களாக அமைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, நிதியமைச்சகம் தன்னுடைய மாதாந்திர பொருளாதார அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:ஊக்கச் சலுகைகள்இரண்டாவது அலையின் பாதிப்பை தணிக்கும் வகையில், பரந்த அளவிலான பொருளாதார நிவாரணமாக, 6.29 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும், ரிசர்வ் வங்கியும் சந்தையின் போக்கை அமைதிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.சுகாதாரம் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில், எட்டு நிவாரண திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சுற்றுலா துறைக்கு ஊக்க சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. 5 லட்சம் சுற்றுலா விசா, கட்டணமின்றி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன் மதிப்பு, 100 கோடி ரூபாயாகும்.மேலும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச் சலுகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.கிராமப்புற தேவைகள் ‘ஆத்ம நிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா’ திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவதன் மூலம், நுகர்வு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் உத்தரவாத திட்டம், இலவச உணவு தானியங்கள், வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றால் கிராமப்புறங்களில் தேவைகள் அதிகரிக்கும்.தடுப்பூசியை போடுவதை விரைவுபடுத்துவது, நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கு இடையேயான உள்கட்டமைப்பு இடைவெளியை குறைப்பது ஆகியவை இந்திய பொருளாதாரத்தின் நீடித்த மீட்புக்கு வழிவகுக்கும்.நல்ல பருவமழை, படிப்படியாக உயரும் பருவகால விதைப்பு, மாநிலங்களில் ஊரடங்குகளை தளர்த்துவது ஆகியவற்றால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு விரைவில் தணியும் என எதிர்பார்க்கலாம்.

இருப்பினும், உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு, உலகளாவிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் பாதிப்புகள் இருக்கும். உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, ஜூன் மாதத்திலிருந்து மேல் நோக்கிய பாதையில் அது தொடர்கிறது. இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)