பதிவு செய்த நாள்
17 ஜூலை2021
19:06
மும்பை:பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, தனியார் உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை, கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 31 சதவீதம் அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி விகிதம், 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை அல்லாத நிறுவனங்களின் விற்பனை, சிறிய அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளது. இவை இதற்கு முந்தைய மூன்று காலாண்டுகளில் வீழ்ச்சியை சந்தித்திருந்தன.
நாட்டிலுள்ள பட்டியலிடப்பட்டுள்ள அரசு துறை அல்லாத, நிதி துறையை சாராத மொத்தம் 2,608 நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தரவு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.அதன்படி மொத்தம் 1,633 தனியார் உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி விகிதம் கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 7.4 சதவீதமாக இருந்த நிலையில், நான்காவது காலாண்டில் 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், செயல்பாட்டு லாப வரம்பு அனைத்து துறைகளிலும் நிலையாக இருந்துள்ளதாக வும், உற்பத்தி நிறுவனங்கள் விற்பனைக்கு ஏற்ப, தங்களுக்கான மூலப் பொருட்கள் செலவை அதிகரித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|