பதிவு செய்த நாள்
23 ஜூலை2021
20:48
புதுடில்லி:‘ஆன்லைன்’ வாயிலாக, வீடுகளை வாங்குவதற்கான தேடுதல்கள், ஜூன் மாதத்தில் அதிகரித்திருப்பதாக, ‘ஹவுசிங் டாட் காம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டிலுள்ள, 42 நகரங்களில், ஜூன் மாதத்தில் வீடு குறித்த தேடுதல்கள், எங்களது தளத்தில் அதிகரித்துள்ளன. முன்னர் இரண்டு மாதங்களாக சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.இதற்கு, கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் குறைந்து வருவதும் ஒரு காரணமாக உள்ளது.
இதனையடுத்து, இவ்வாண்டின் இரண்டாவது பாதியில், இத்துறை மீட்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.வீடு வாங்குவதற்கு, தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கொண்ட தேடலில், டில்லி முதலிடம் வகிக்கிறது. மும்பை இரண்டாவது இடமும், பெங்களூரு மூன்றாவது இடமும், சென்னை நான்காவது இடமும் வகிக்கின்றன.பிரதான நகரங்களை விட, இரண்டாம் நிலை நகரங்களில் மீட்சி வேகமாக இருக்கிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த, ‘எலாரா டெக்னாலஜிஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமானதாகும், ஹவுசிங் டாட் காம் நிறுவனம். எலாரா டெக்னாலஜிஸ், ‘பிராப்டைகர்’ மற்றும் ‘மக்கான் டாட் காம்’ ஆகிய நிறுவனங்களையும் நடத்தி வருகிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|