பதிவு செய்த நாள்
28 ஜூலை2021
19:21
கிராமப்புறங்களில் டிஜிட்டல் வரிசைப்படுத்துதல் மற்றும் விநியோகத்தை ஊக்குவிப்பதற்காக சிஎஸ்சி ஈ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இ-காமர்ஸ் முயற்சியான சிஎஸ்சி கிராமீன் ஈ-ஸ்டோருடன் முன்னணி 3 சக்கர வாகன ஓஇஎம்களில் சிறந்து விளங்கும் அதுல் ஆட்டோ லிமிடெட் கூட்டு சேர்ந்துள்ளது. இணைப்பின் ஒரு பகுதியாக, வாகன உற்பத்தியாளரின் தயாரிப்பு வரம்பு சி.எஸ்.சி கிராமீன் ஈஸ்டோரில் பட்டியலிடப்பட்டு உள்நாட்டு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆர்வமுள்ள வி.எல்.இக்கள் (கிராம அளவிலான தொழில்முனைவோர்) மூலம் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
இந்த கூட்டு மெய்நிகர் தொடக்கத்தை எம்.டி.-சிஎஸ்சி எஸ்பிவி டாக்டர் தினேஷ் தியாகி, கிராமீன் ஈ-ஸ்டோர் சிஓஓ - சிஎஸ்சி ஸ்ரீ ராஜா கிஷோர், அதுல் ஆட்டோ லிமிடெட் இயக்குநர் நீரஜ் சந்திரா மற்றும் அதுல் ஆட்டோ லிமிடெட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் புஷ்கர் சின்ஹா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அதுல் ஆட்டோ லிமிடெட் இயக்குனர் நீரஜ் சந்திரா, “சிஎஸ்சி கிராமீனில் தயாரிப்புகளை பட்டியலிட உதவும் கிராம தொழில் முனைவோர்கள் மூலம், அதன் பரந்த அளவிலான முச்சக்கர தயாரிப்புகளுக்கான தேவையை உருவாக்குவதற்கு அதுல் ஆட்டோ லிமிடெட் ஒரு வலுவான செயல்முறையை உருவாக்கியுள்ளது. கிராம தொழில் முனைவோர்கள் அருகிலுள்ள அதுல் ஆட்டோவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களின் ஆதரவின் மூலம் கிராமப்புறங்களில் விற்பனையை மேற்கொள்ளலாம், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|