பதிவு செய்த நாள்
11 ஆக2021
20:16
புதுடில்லி:மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் ‘லென்ஸ்கார்ட்’ நிறுவனம், நடப்பு நிதியாண்டுக்குள்ளாக 2,000 பேரை பணியில் அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்நிறுவனம் அதன் பன்னாட்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், சிங்கப்பூர், மேற்கு ஆசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கூடுதலாக, 300 பேரை பணியமர்த்த இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
குறிப்பாக, தரவு நிபுணர்கள், வணிக பகுப்பாய்வாளர்கள், தரவு பொறியியலாளர்கள் போன்றோரை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.மார்ச் மாதத்துக்குள்ளாக, கிட்டத்தட்ட 1,500 சில்லரை வர்த்தக பணியார்களையும், 100 பொறியியலாளர்களையும் பணியமர்த்த உள்ளது.
இந்நிறுவனத்தில் தற்போது பொறியியலாளர்கள், தரவு விஞ்ஞானிகள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட, 5,000 பேர் பணிபுரிகின்றனர்.இந்நிறுவனம் 2010ல் துவங்கப்பட்டது. இதில், ‘சாப்ட்பேங் விஷன் பண்டு, கே.கே.ஆர்., ஐ.எப்.சி., பிரேம்ஜி இன்வெஸ்ட்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|