பதிவு செய்த நாள்
19 செப்2021
18:55

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், தாமதமாக வரி தாக்கல் செய்வதை தவிர்ப்பது அபராதத்தை தவிர்க்க உதவும் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி வரை வரி தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப் பட்டிருந்தாலும், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், குறித்த காலத்தில் வரி தாக்கல் செய்வது அவசியம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட வரம்பில் வருபவர்கள் அபராதம் செலுத்த நேரிடலாம் என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வரி செலுத்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள், குறித்த காலத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருக்க வில்லை எனில், இந்த தொகைக்கு மாதம் 1 சதவீத அபராத வட்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனவே, கடைசி நேரம் வரை காத்திருக்காமல், உரிய காலத்தில் வரி தாக்கல் செய்வது சிறந்தது என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|