பதிவு செய்த நாள்
30 செப்2021
20:40
புதுடில்லி:நடப்பு பத்தாண்டு, இந்தியாவின் பத்தாண்டாக இருக்கும் எனவும், வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:நாட்டின் மறுசீரமைப்புகான பணிகள் மற்றும் பிரச்னைகளை வாய்ப்பாக மாற்றக்கூடிய தன்மை ஆகியவற்றால், இந்தியா உலக நாடுகளிலிருந்து தனித்து நிற்கிறது. கொரோனாவுக்கு முன்பிருந்தே இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவானதாக இருந்து வருகிறது. வெறும் நிதிச் சிக்கல்கள் மட்டுமே உள்ளன.
என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பத்தாண்டு அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும்.அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.5 – 7 சதவீதமாக இருக்கும். அதன் பின் தொடர்ந்து மேலும் அதிகரிக்கும். இந்த பத்தாண்டில் வளர்ச்சி சராசரியாக, 7 சதவீதத்துக்கும் கூடுதலாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|