பதிவு செய்த நாள்
06 அக்2021
20:53
புதுடில்லி:இந்தியாவின் 30வது ‘யுனிகார்ன்’ அந்தஸ்து கொண்ட நிறுவனமாக, ‘காய்ன்சுவிட்ச் குபேர்’ எனும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் உருவெடுத்துள்ளது.அண்மையில் இந்நிறுவனத்தில் முதலீடுகள் வந்து சேர்ந்த நிலையில், இதன் மதிப்பு 1.9 பில்லியன் டாலர், அதாவது 14 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
பொதுவாக ஒரு பில்லியன் டாலர், அதாவது 7,500 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம், யுனிகார்ன் அந்தஸ்து உள்ள நிறுவனமாக அழைக்கப்படும். காய்ன்சுவிட்ச் குபேர் நிறுவனத்தின் மதிப்பு, இந்த வரம்புக்குள் வந்ததை அடுத்து, யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனமாக உயர்ந்துள்ளது.இதையடுத்து, நாட்டில் யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த இந்நிறுவனம், மெய்நிகர் நாணயங்களுக்கான சந்தையாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டது.இதன் நிறுவனர் அஷிஸ் சிங்கால், ‘அமேசான், மைக்ரோசாப்ட்’ போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். கோவிந்த் சோனி, விமல் சாகர் ஆகியோர் நிறுவனத்தின் இணை நிறுவனர்களாவர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|