அலுவலக குத்தகை தேவை அதிகரிப்பு அலுவலக குத்தகை தேவை அதிகரிப்பு ... ஆயிரம் சந்தேகங்கள் : ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்யலாமா? ஆயிரம் சந்தேகங்கள் : ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்யலாமா? ...
பண்டிகை காலமும் நிதிக்கல்வியின் தேவையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
19:03

பண்டிகை காலம் கொண்டாட்டத்திற்கான வாய்ப்பாக அமைகிறது. புதிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி மகிழ்வதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது; அதற்கேற்ப வர்த்தக நிறுவனங்களும் தள்ளுபடி சலுகைகளை வாரி வழங்கி நுகர்வோரை ஈர்க்கின்றன. பண்டிகை கால செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வது அவசியம் என்பதோடு, குழந்தைகளுக்கு நிதிக் கல்வியின் முக்கிய அம்சங்களை கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பாகவும் அமைவதை புரிந்து கொள்ள வேண்டும். பண்டிகை காலத்தை முன்னிட்டு, குழந்தைகளிடம் நிதிக் கல்வி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான வழிகளை பார்க்கலாம்.


பரிசுப் பொருட்கள்:


பண்டிகை காலத்தில் பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஆசிகளுடன் பரிசுப் பொருட்களை அளிக்கும் பழக்கமும் இருக்கிறது. பரிசாக பலவித பொருட்களை அளிக்கலாம் என்றாலும், ரொக்க பணத்தை அளிக்கும் பழக்கமும் பின்பற்றப்படுகிறது. இந்த பழக்கத்தை, பணத்தின் அருமையை உணர்த்த பயன்படுத்திக் கொள்ளலாம்.


கொண்டாட்டம்:


பண்டிகை காலம், குடும்பத்துடன் குதுாகலமாக நேரத்தை செலவிட வழி செய்கிறது. புத்தாடைகள், இனிப்புகள் என, குடும்பத்தினர் ஒன்றாக பேசி மகிழும் நிலையில், சேமிப்பின் முக்கியத்துவம் பற்றியும் பிள்ளைகளுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும். உறவினர்கள் பரிசளிக்கும் பணத்தை செலவு செய்யாமல், சேமிக்க ஊக்குவிக்கலாம்.-


பட்ஜெட் பழக்கம்:


சேமிப்பு பற்றி கற்றுத் தருவதோடு, பணத்தை பட்ஜெட் போட்டு செலவிடுவதன் அவசியத்தையும் எடுத்துக் கூற வேண்டும். பிள்ளைகள் விரும்பும் பொருட்களை பட்டியலிடச் சொல்லி, அவற்றை வாங்க தேவையான தொகையை கணக்கிட வைத்து, ஒவ்வொன்றுக்கும் ஒதுக்க வேண்டிய தொகையை தீர்மானிக்க வைக்கலாம். திட்டமிட்டு சேமிக்கும் பழக்கத்தையும் சொல்லித் தரலாம்.



ரொக்கப்பணம்:

திட்டமிட்டு செலவிடுவதன் அவசியம் பற்றி பேசுவதன் மூலம், பிள்ளைகள் மனதில் பொருட்களை வாங்க பணம் தேவை என்பதை புரிய வைக்கலாம். இதன் மூலம், பணத்தின் மதிப்பையும் உணர்த்தலாம். அத்தியாவசிய செலவு மற்றும் தேவையில்லாத செலவு பற்றியும் சிறு வயதிலேயே புரிய வைக்கலாம்.

பரிசு கார்டு:


பரிசுத் தொகையை ரொக்கமாக அளிப்பதற்கு பதில் கார்டாக அளித்து, அதை இயக்கி நிர்வகிக்கும் முறையையும் கற்றுக் கொடுக்கலாம். இது, அவர்களுக்கு பொறுப்புணர்வையும் அளிக்கும். குறிப்பிட்ட தொகையை பிள்ளைகள் பெயரில் முதலீடு செய்து, அவர்களுக்கு முதலீட்டின் அவசியத்தையும் உணர்த்தலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)