பதிவு செய்த நாள்
05 நவ2021
19:25
புதுடில்லி:பொருட்களின் விலை அதிகரித்து வருவதை அடுத்து, அது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் விலை வரம்பை கடுமையாக பாதிக்கிறது என, தொழில்துறை சேம்பரான பி.எச்.டி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னரான சக்திகாந்த தாசின் பதவிக்காலத்தை நீட்டித்து அரசு அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள இவ்வமைப்பு, சக்திகாந்த தாஸ் தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்தில், சில முக்கியமான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.குறிப்பாக, பொருட்களின் விலை அதிகரித்து வருவது, வணிகங்களை பாதிப்பதாக இருக்கிறது என்றும், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை சிறந்த வகையில் பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பணப்புழக்கம் நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டு உள்ளது. அத்துடன், பணவீக்க அழுத்தம் இருந்தாலும், தேவை அதிகரிக்க வேண்டும். ஏனெனில் பொருளாதாரம் மேலும் முன்னேறவும், இழந்த வேகத்தை மீண்டும் பெறவும் தேவை அதிகரிக்க வேண்டும். நாட்டின் தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில், பொருளாதார வளர்ச்சி மீட்சியடையும் என்றும் இவ்வமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|