பதிவு செய்த நாள்
06 நவ2021
19:27
புதுடில்லி:இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடைபெற்றிருப்பதாக, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான சி.ஏ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை, பெரிய அளவில் களைகட்டாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு, மக்கள் பொருட்களை வாங்குவதற்கு சந்தையில் குவிந்தனர். கிட்டத்தட்ட 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் நடைபெற்றிருப்பதாக சி.ஏ.ஐ.டி., தெரிவித்துள்ளது. மேலும், இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத தீபாவளி விற்பனை ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீபாவளி வியாபாரம் அதிகரித்ததை அடுத்து, உற்சாகமடைந்த வியாபாரிகள், அடுத்து 14ம் தேதியிலிருந்து துவங்கவிருக்கும் திருமண சீசனுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்றும் இக்கூட்டமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் கந்தல்வால் கூறியதாவது: இந்த தீபாவளிக்கு 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வணிகம் நடைபெற்றுள்ளது. டில்லியில் மட்டும், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடைபெற்றுஉள்ளது.
மேலும், இந்த ஆண்டு சீனப் பொருட்கள் அதிகம் விற்கப்படவில்லை. நுகர்வோரும் சீன பொருட்கள் வாங்குவதை தவிர்த்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்கினர்.தங்கம் மற்றும் வெள்ளியை பொறுத்தவரை, இந்த ஆண்டு தீபாவளியின் போது, 9,000 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|