பதிவு செய்த நாள்
07 டிச2021
10:49
புதுடில்லி : இதுவரை கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் 3 கோடிக்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி சம்பந்தமாக, இதுவரை 3 கோடிக்கும் அதிகமான படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 4 லட்சத்துக்கும் அதிமான படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி தாக்கலை மறக்காமல் செய்யுமாறும், கடைசி நேர இடையூறுகளை தவிர்க்கும் வகையில், மேலும் தாமதிக்காமல் உடனே தாக்கல் செய்யுமாறும், வரி செலுத்துவோரை மின்னஞ்சல் வாயிலாகவும், மற்றும் குறுஞ்செய்திகள், ஊடக விளம்பரங்கள் வாயிலாகவும் வருமான வரி துறை கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக, வருமான வரி தாக்கல் செய்வதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|