பதிவு செய்த நாள்
10 டிச2021
20:19
புதுடில்லி:மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், தன்னுடைய வேலையை விட்டுவிடலாம் என யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வேலையை விட்டுவிட்டு, முழு நேர வழிகாட்டுபவராக இருப்பது குறித்த யோசனையில் இருப்பதாகவும், ‘இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்...’ என்றும் ‘டுவிட்டரில்’ கேட்டுள்ளார்.அவ்வப்போது அதிரடியாக ஏதாவது கருத்துகளை டுவிட்டரில் வெளியிடுவது எலான் மஸ்கின் பழக்கம். அத்துடன், அது குறித்து டுவிட்டரில் அவரை பின்பற்றுபவர்களின் கருத்துகளையும் கேட்பது பழக்கம்.
இதற்கு முன் கடந்த மாதம், தன்னிடமிருக்கும் டெஸ்லா நிறுவன பங்குகளில் 10 சதவீதத்தை விற்க இருப்பதாகவும், அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றும் கேட்டிருந்தார். பங்குகளை விற்பதற்கு பலர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, கிட்டத்தட்ட 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தார்.இப்போது ‘வேலையை விட்டுவிடலாமா’ எனக் கேட்டுள்ளார்.
இதற்கு முன் சில சந்தர்ப்பங்களில், வாரத்தின் ஏழு நாட்களிலும் கடுமையாக வேலை செய்து வருவதாகவும், சிறிது ஓய்வு நேரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.தற்போது வேலையை விட்டுவிட்டு, முழு நேர வழிகாட்டியாக மாறலாமா எனக் கேட்டிருக்கிறார்.டுவிட்டரில் அவரை பின்பற்றுபவர்களில் பெரும்பாலானோர் என்ன கருதுகின்றனர் என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|