பதிவு செய்த நாள்
24 டிச2021
17:10
இந்தியாவின் மிகப் பெரிய வாகன கடன் வழங்கும் நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் லிட், ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் லிட் மற்றும் அதன் புரமோட்டர் நிறுவனமான ஸ்ரீராம் கேப்பிட்டல் லிட் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் எஸ்சிஎல் மற்றும் எஸ்சியுஎப் நிறுவனங்களை எஸ்டிஎப்சி நிறுவனத்துடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவித்தன.
இந்த இணைப்பு முறையே எஸ்சிஎல், எஸ்சியுஎப் மற்றும் எஸ்டிஎப்சி ஆகியவற்றின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது. அதே போல ஆர்பிஐ, சிசிஐ, ஐஆர்டிஏ, என்எச்பி, என்சிஎல்டி ஆகியவற்றின் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் தேவைப்படும் பிற ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கும் உட்பட்டதாகும். இந்த பரிவர்த்தனைக்கு மார்கன் ஸ்டான்லி மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிதி ஆலோசகர்களாக செயல்பட்டன. பன்சி சி மேத்தா & கோ. மற்றும் எர்ன்ஸ்ட் & யங் மூலம் மதிப்பீட்டுப் பயிற்சி நடத்தப்பட்டது. பரிவர்த்தனைக்கான மறுசீரமைப்பு மற்றும் வரிவிதிப்பு மதிப்பீட்டிலும் ஈ ஒய் உதவியுள்ளது. ஜே அண்ட் எம் சட்ட ஆலோசகராக இருந்துள்ளார். தேவையான கருத்துக்கு எச்எஸ்பிசி மற்றும் ஜேஎம் பினான்சியல் உதவியுள்ளன.
ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் உள்ள தலைமைக் குழு, இரு நிறுவனங்களிலும் உள்ள அபரிமிதமான திறமைகளைக் கையாளும். எஸ்டிஎப்சி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் துணை செயல் தலைவர் உமேஷ் ரேவங்கர், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக இருப்பார். ஸ்ரீராம் சிட்டி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் ஒய்.எஸ். சக்ரவர்த்தி, ஒருங்கிணைந்த நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்டியாக இருப்பார். எஸ்சியுஎப் குழுவில் உமேஷ் ரேவாங்கரையும், எஸ்டிஎப்சி இயக்குநர்கள் குழுவில் ஒய் எஸ் சக்ரவர்த்தியையும் நியமிக்க அந்தந்த நிர்வாக குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளன. எஸ்டிஎப்சியின் குழுவும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் ஷர்மாவை குழுவில் முழு நேர இயக்குநராக நியமிக்க ஒப்புதல் அளித்தது.
இணைப்பிற்குப் பிறகு, 3500-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் எஸ்டிஎப்சி மற்றும் எஸ்சியுஎப் நிறுவனத்தின் விற்பனை மையங்களின் பரவலான வலையமைப்பின் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளையும் எஸ்சியுஎப் மற்றும் எஸ்டிஎப்சி-ன் அனைத்து வாடிக்கையாளர்களும் பெற முடியும். இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பின் மூலமாக 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்கும்.
வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும் அதை வேளையில், தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஒருங்கிணைந்த விற்பனை மூலம் பங்குதாரர்களின் மதிப்பை உயர்த்தவும் வழிவகுக்கும். இவையனைத்தும் 50,000-க்கும் அதிகமான பணியாளர்களின் வலுவான கட்டமைப்பின் மூலம் சேவைகளாக வழங்கப்படும். இந்த இணைப்பு, தொழில் நுட்பத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வர உதவும். இது எங்களது வாடிக்கையாளர்களுக்கு தரவு மற்றும் பகுப்பாய்வு மற்றும் சேவை ஆகியவற்றை சிறப்பாக வழங்கவும் உதவும், என்று ஸ்ரீராம் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|