ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ...  ஆயிரம் சந்தேகங்கள்: கப்பலில் பணிபுரிபவர்கள்  வருமான வரி கட்ட வேண்டுமா? ஆயிரம் சந்தேகங்கள்: கப்பலில் பணிபுரிபவர்கள் வருமான வரி கட்ட வேண்டுமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி பிரச்னைகள் குறித்து பேசுவதன் அவசியம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
19:40

நிதி பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எதிர்பாராத வேலை இழப்பு அல்லது தொழில் நஷ்டம், பொருளாதார பாதிப்பை உண்டாக்கலாம். அல்லது வரவுக்கு மீறி செலவு செய்வது போன்றவற்றாலும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கலாம். இது போன்ற சூழல் சோதனையானது என்றாலும், உறுதியுடன் திட்டமிட்டு செயல்பட்டால் மீண்டு வந்துவிடலாம். ஆனால், ஒரு சிலர் தங்களது நிதி பிரச்னைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையில் சிக்கி தவிப்பதுண்டு. இது மேலும் பிரச்னைக்கு வழிவகுக்கலாம். இந்த நிலையில் இருந்து மீள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.

நிதி மறுப்பு:

நிதி விஷயங்கள் மன அழுத்தத்தை உண்டாக்கலாம். இதை எதிர்கொண்டு தீர்வுகளை நாடுவதற்கு பதிலாக, நிதி விஷயங்கள் பற்றியே யோசிக்காமலும், பேசாமலும் இருப்பது, ‘நிதி நிலை மறுப்பு’ என சொல்லப்படுகிறது. நிதி பிரச்னைகளை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய எதிர்மறை உணர்வை தவிர்ப்பது இதற்கான நோக்கமாகிறது.

நிதி வேஷம்:

நிதி நிலை மறுப்பு மனநிலை கொண்டவர்கள், தங்களது நிதி பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதை தவிர்ப்பர். மேலும் எல்லாம் சரியாக இருக்கிறது என்பதைதவிர்ப்பதற்காக, நல்ல நிலையில் இருப்பது போல காண்பித்துக் கொள்வர். சிலர், தற்பெருமை பேசுவதோடு, மற்றவர்களையும் குறை சொல்வதில் ஈடுபடலாம்.

தப்பித்தல் மனநிலை:

நிதி பிரச்னைகள் பற்றி பேசாமல் இருப்பதோடு, வங்கிக் கணக்கு புத்தகம், கிரெடிட் கார்டு அறிக்கை போன்றவற்றை திறந்து பார்க்காமல் இருப்பதையும் ஒரு உத்தியாக பின்பற்றுவர். நிதி பிரச்னைகளை நினைவூட்டக்கூடியவர்களையும் தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுவர். இது ஒரு பொய்யான பாதுகாப்பை அளிக்கும்.

உதவி கோருதல்:

நிதி பிரச்னைகளை ஏற்க மறுக்கும் மனநிலை தற்காலிக ஆறுதலை அளித்தாலும், பிரச்னை பெரிதாகும் போது நிலைமை மோசமாகலாம். எனவே, முதலில் தங்களுக்கு பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டு, அது குறித்து வெளிப்படையாகபேச முன்வருவது அவசியம். நம்பகமானவர்களின்உதவியை நாடலாம்.

தீர்வுக்கு வழி:

பிரச்னையை ஏற்றுக்கொண்ட பின், உண்மையான நிதி நிலையை கண்டறிய வேண்டும். அடுத்ததாக எல்லாவற்றையும் சரி செய்து விட முடியும் எனும் நம்பிக்கையோடு, பிரச்னையை சமாளிக்கும் வழிகளை நாட வேண்டும். கடனை அடைப்பது, வேலை தேடுவது போன்றவற்றை துவக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)